Kathambari Novels



“என்ட்ரன்ஸ் எக்ஸாம்ல நிறைய பிராடு நடக்கு. அதைப் பத்தின டீடெயில்ஸ்” என்று சமர்ப்பித்த அறிக்கையைச் சுட்டிக் காட்டி, “இதுல இருக்கு” என்றான்.

“சீஃப் செக்ரட்டரி சொன்னாரு. செங்கல்பட்டு ஸ்டுடென்ட் டெத் பத்தி நானும் நியூஸ்ல பார்த்தேன். நீங்க பர்தர் இன்வெஸ்டிகேஷனுக்கு ஆர்டர் இஸ்யூ

பண்ணீங்கள?” என மாறனைப் பார்த்துக் கேட்க, “ஆமா சார்” என்றான்.

“நீங்க பாலோவ் பண்றீங்கள?” என சசியைப் பார்த்துக் கேட்டார்.

“யெஸ் சார்! ஸ்டேஷன் எஸ்ஐகிட்ட விசாரிச்சிருந்தா நிறைய உண்மைகள் தெரிய வந்திருக்கும். பட் அவரோட ட்ரான்ஸ்பரால அது முடியலை” என்று, வழக்கிற்கு முட்டுக்கட்டையாக இருந்ததைக் குறிப்பிட்டான்.

முதல்வர் கொஞ்சம் அமைதியானார். பின் அந்த இளைஞர்கள் இருவரையும் பார்த்தார். பின், சென்னை காவல் ஆணையரைப் பார்த்தார்.

அந்தப் பார்வைக் கேட்ட கேள்வி தெரிந்ததால், “செங்கல்பட்டு டிஐஜி இப்படி எதுவும் சொல்லலை” என முதல்வரைப் பார்த்துச் சொன்ன ஆணையர், “நீங்க அப்பவே சொல்லிருக்கலாமே?!” என்று சசியிடம் கேட்டார்.

மாறனைத் தவிர அறையிலிருந்த அனைவரும் சசியைப் பார்த்தனர். ‘ஏன், டிஐஜிக்கோ, டிஜிபிக்கோ இது தெரியாதா?’ என்ற எண்ணம் வந்ததும், சசி அமைதியாக இருந்தான்.

அதை அறிந்த மாறன், “இப்போ நீங்க பெர்மிஷன் கொடுத்தாலும் எஸ்ஐகிட்ட விசாரிக்கலாம்” என துணிந்து பேசியதும், அனைவரின் பார்வையும் மாறன் மீது வந்தது.

உடனே, “சார்! இது செங்கல்பட்டுல மட்டும் நடக்கலை. அக்ராஸ் தி தமிழ்நாடு நடந்திருக்கு. நடந்துக்கிட்டிருக்கு. அதனால முறையான விசாரணை வேணும்” என்று உடைத்துப் பேசினான். கூடவே சில விவரங்களையும் சொன்னான்.

“புரியுது” என்ற முதல்வர், “எஜூகேஷனல் மினிஸ்ட்டர வர சொல்லிருந்தேன்” என்று தலைமைச் செயலாளரைப் பார்த்ததும், “மேடம் பிஏகிட்ட கேட்டேன். வந்துக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னாரு” என்றார்.

மெல்ல தலையசைத்த முதல்வர், “உங்க டிஸ்ட்ரிக்ட்ல இன்வெஸ்டிகேஷனை கன்டினியூ பண்ணுங்க” என்று சசியைப் பார்த்துச் சொன்னார்.

‘அது மட்டும் போதாது என்றுதானே இங்கு வந்தோம்’ என்று சசி உள்ளுக்குள் கொதித்தாலும், “ஓகே சார்” என்று ஒப்புக் கொண்டான்.

சென்னை காவல் ஆணையரைப் பார்த்து, “எல்லா டிஸ்ட்ரிக்ட் ஸ்டேஷன்லயும் ப்ராப்பர் இன்வெஸ்டிகேஷன் பண்ண சொல்லுங்க” என்று முதல்வர் சொல்ல, அவரும் “சரி சார்” என்றார்.

‘இத்தனை வருடங்கள் நடந்திராதது, இனிமேல் நடக்குமா? இல்லை, நடக்க விடுவார்களா?’ என்ற ரீதியில் சசியும் மாறனும் அமர்ந்திருந்தார்கள்.

மேலும் முதல்வர், புன்னகையுடன் மாறனைப் பார்த்து, “குட் ஒர்க்! நாளைக்கு கலெக்டர்ஸ் மீட்ல பார்க்கலாம்” என்றார்.

‘இவ்வளவுதானா, வேறு ஒன்றுமில்லையா?’ என்று தோன்ற, “சார்! விசாரணை பத்தி…’ என்று கேட்டதற்கு, “எஜூகேஷனல் டிபார்ட்மென்ட்கிட்ட பேசிட்டு, முடிவெடுக்கலாம்” என்று சொல்லி முடித்தார்.

அதன்பின், ‘சந்திப்பு முடிவடைந்தது’ என்பது போல உதவியாளரைப் பார்க்க, மேசையிலிருந்த அறிக்கை அடங்கிய கோப்பை அவர் எடுத்துக் கொண்டார்.

மாறனுக்கு, ‘நீ இனி இதில் தலையிடாதே!’ என்று சொல்வது போல் இருந்தது.

அவனுடைய அதிகார எல்லைக்குள் செய்ய வேண்டியதைச் செய்தாயிற்று என்பதால், முறைப்படி விடைபெற்று சசியுடன் கிளம்பி வெளியே வந்தான்.

வெளியே வந்த சசிக்கும் மாறனுக்கும், ‘இவர்களிடமிருந்து முறையான விசாரணை நடப்பதற்கான உத்தரவு வருமா?’ என்ற சந்தேகம் எழுந்தது.

இந்தச் சந்திப்பே ஏதோ ஒரு கண்துடைப்பாகத்தான் தெரிந்தது.

சசியுடன் சேர்ந்து நடந்து கொண்டே, “இவங்க நடவடிக்கை எடுப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கையே இல்லை” என்று மாறன் பொருமினான்.

அவனுடன் நடந்து சசி, “அடுத்து என்ன செய்யலாம்னு யோசி” என்றதும்,

“இதுக்கு மேல என்ன செய்ய?” என இயலாமையுடன் கேட்டான்.

மேலும், “எந்த ஒரு ஸ்டேஷன்லயும் இன்வெஸ்டிகேஷன் ப்ராப்பரா நடக்க விட மாட்டிக்கிறாங்க. சிஎம்மும் சரியா இன்ட்ரெஸ்ட் காட்டலை. என்ன பண்ண?” என்று கொதித்துப் போய் பேசினான்.

“எனக்கும் தெரிஞ்சது. பட் இன்னைக்கு ஏன் எஜூகேஷனல் மினிஸ்டர் வரல?” என சசி சந்தேகிக்கும் போதே, எதிரே காசி வந்து, “சார் ப்ரெஸ்ஸ மீட் பண்ண போறீங்களா?” என்று மாறனிடம் கேட்டார்.

கொஞ்சம் யோசித்த பின், ‘ஆமாம்’ என்று அவன் தலையசைத்ததும், காசி சென்றுவிட்டார்.

“வா பிரஸ்ஸ மீட் பண்ணிட்டு வந்திடலாம்” என்று மாறன் சொல்ல, “சீஎம்தான் எஜூகேஷனல் டிபார்ட்மென்ட்கிட்ட இதை பத்தி பேசறேன்னு சொன்னாருல? அதுக்கு முன்னாடி இதெதுக்கு மாறன்??” என்றான்

“அவங்ககிட்டருந்து பேர் டெசிஷன் வரும்னு நம்புறியா சசி?”

“நம்பலை. பட் இது வேண்டாம்னு தோணுது. அவங்களைக் கோபப்பட வைக்கும்”

“ஏன், இப்போ அவங்களுக்கு நம்ம மேல கோபம் இல்லையா?”

“இருக்கு. ஆனா இது வேற. இதுவரைக்கும் எனக்கும் உனக்கும் தெரிஞ்ச ஒரு விஷயத்தை, எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டப் போற”

“சசி! நம்மளை வேற போஸ்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்றதுக்கு முன்னாடி, என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்யலாமே! தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சப்பறம் விட்டுட்டுப் போக முடியலை. அட்லீஸ்ட் கேஸை நெக்ஸ்ட் லெவெலுக்கு புஷ் பண்ணி விடுவோமே?

வேற யாரைப் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம். நாம எதுக்காக வந்தோம்னு சொல்லலாம்” என மாறன் சொல்ல, அதற்குமேல் சசி யோசிக்கவில்லை.

இருவரும் சேர்ந்து ஊடகத்தினரைச் சந்தித்தனர். சில கேள்விகள், சில பதில்கள் என்று ரீதியில் அந்தச் சந்திப்பு சென்றது. கடைசியில் ‘எதற்காக

முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பு?’ என்று கேள்வி வந்தது. 

“செங்கல்பட்டு விசாரணையில, இந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம்ல முறைகேடு நடந்துக்கிட்டு இருக்கிறது தெரிய வந்தது. அதைப் பத்தி டீடெயில் ரிப்போர்ட் முதலமைச்சர்கிட்ட சப்மிட் பண்ணி, சரியான முறையில விசாரணை நடக்க கேட்டிருக்கோம்” என பதில் சொல்லி, மாறன் சந்திப்பை நிறைவு செய்தான்.

அனைத்து ஊடங்களிலும், இந்தச் செய்தி இரவு நேர முக்கிய செய்தியாக ஒளிபரப்பபட்டது. மேலும் அடுத்தநாள், ‘நுழைவுத் தேர்வில் முறைகேடு’ என்று பெரிய எழுத்துக்கள் கொண்ட முதல் பக்கச் செய்தியாகப் பத்திரிக்கைகளில் இடம்பெற்றது.

ஒவ்வொரு நாளும் அதிகாரத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டே போனான் யாழ்மாறன்!!

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top