Kathambari Novels
அத்தியாயம் – 34
இந்தநொடி கீர்த்தி அழவில்லை!
இவ்வளவு நேரமும் டேவிட், அழ வேண்டாம் என்று அவளிடம் பலவிதமாகக் கேட்டிருந்தான். ஆனால் அவளோ அழுது கொண்டேயிருந்தாள். கடைசியில் ஓய்ந்து, சோர்ந்து போய்தான் அழுவதை நிறுத்தியிருந்தாள்.
அவள் அழுவதை நிறுத்தட்டுமென்று பேசாமல் இருந்தவன், “கீர்த்தி, புரியுது, நடந்தது உன்னய ரொம்ப அஃபெக்ட் பண்ணிருக்குனு, பட் நீ இவ்ளோ அழாத. ஐ அம் ஹீயெர் ஃபார் யூ, ஜஸ்ட் ப்ரீத்” என்றுவிட்டு, ‘என்னிடம் வந்திடு’ என்று அழைப்பது போல் இருகைகள் விரித்தான்.
அந்தக் கரங்களுக்குள் பொருந்திக் கொள்வது, கவலைகளுக்கு மருந்திடுவது போல இருக்குமென தெரிந்தும், சிறிதும் நகராமல் விழிகளில் அலைப்புறுதல் நிரம்பியிருக்க அவனைப் பார்த்தாள்! ஆனால், ‘வேண்டாம்’ என்கவில்லை!!
மறுப்பில்லை என்றதும் மெல்ல அவளருகில் நகர்ந்தவன், மெதுவாக அவள் கைப்பிடித்து, மென்மையாக அவளை அரவணைத்துக்கொண்டு, அவள் முகம் பார்த்து, “நான் இருக்கிறப்ப, யாரும் இல்லனு பேசாத” என்றுவிட்டு, அவள் நெற்றியில் இதழ்தடம் பதித்தான்.
விழிநீர் வடித்தே சிவந்திருந்த விழிகள் கொண்டு அவள் அவன் முகத்தையே பார்க்கவும், “கீர்த்தி” என்று காதலும் கஷ்டமும் சேர்ந்த குரலில் அழைத்தவன், இன்னொரு முறை முத்தம் வைத்தான்.
முத்தமா… அழுத்தமா என்று கேட்கும்படி ஒரு முத்தம்!!
இத்தனை நாட்கள் இதை இழந்திருந்த ஏக்கத்தில் அவளுக்கு கண்ணீர் தாரை தாரையாக வர, அடிபட்ட அவள் கையை அவன் ஆராய்ந்தான். வெளிக்காயம் இல்லை, வீக்கம் இருந்தது. கையை அசைத்துப் பார்க்கப் போக, ‘ஷ்’ என்றாள். “கைய மூவ் பண்ண மாட்டிக்க, பெயின் ரொம்பவா” என்று அப்போதிருந்து கவனித்ததைக் கேட்க, “ம் ம்” என்றாள் அயர்வுடன்.
ஆராயும் பார்வையுடன், “வேற எங்கயும் அடி பட்டிருக்கா” என்றான். ‘இல்லை’ என்று தலையசைத்தாள். உடனே அவன் எழப் போக, “டேவிட்” என்று அவன் அருகாண்மை தேடும் குரலில் அழைத்தாள். “ஜஸ்ட் எ மினிட்” என்று வெளியே போய்விட்டு வந்து, அவளருகில் அமர்ந்தான்!
இன்னும் அவள் அழுதுகொண்டே இருக்க, “போதும், அழாத” என்று அவளை அவன் பக்கம் நகர்த்தி, கவனமாக கைவளைவில் வைத்துக் கொண்டான்.
கண்ணீரைக் கட்டுப்படுத்தி, “ம் ம்” என்றவள், சற்றுநேரம் அமைதியாக அவன் நெஞ்சில் முகம் வைத்திருந்தாள். சட்டென்று, “இந்த திலீப் எதுக்கு இப்படிப் பண்ணான்? நான் நினைச்சிக்கூடப் பார்க்கல. எவ்ளோ எனக்கு சப்போர்ட்டா இருந்திட்டு, கடைசில இப்படிப் பண்ணிட்டானே… ரொம்பக் கஷ்டமாருக்கு.
திலீப் அப்பா சொல்றாங்க, உன் அம்மா உனக்காக யோசிக்கல, என் பையன் யோசிச்சிருக்கான், அதான் இப்படிலாம்னு. ஆமா திலீப் எனக்காக நிறைய யோசிப்பான்… உண்மைதான். ஆனா அதுக்காக இப்படிக் கேட்கனுமா?!
அப்புறம் சொல்றாங்க… பரிதாபப் படற நிலையில நான் இருக்கிறதாலதான் அப்படிக் கேட்டான்னு, ஆனா நான் அப்படி இல்லயே, நல்லாதான இருக்கேன்! திலீப்க்கு இது தெரியாதா…
திலீப்கிட்ட நம்மள பத்தி சொல்லிருந்தா, இப்படிக் கேட்டிருக்க மாட்டான்னு சொல்றாங்க? ஆனா நான் சொன்னாலும்… சொல்லலனாலும் திலீப் அப்படி என்கிட்ட கேட்டிருக்க கூடாதுலயா…” என்று இத்தனை நாட்களாக நெஞ்சை அடைத்து, அழுத்தியதை வெளிப்படுத்தி வெடித்தழுதாள்.
அவள் வேதனை புரிந்தது! அந்தவேளையில் அவனும் விலகி நின்றது மனதை நிந்தித்தது! இந்தவேளை அவள் அழுகை அவனை அலைக்கழித்தது! ஆறுதல் வார்த்தைகள் வசப்படாமல் போக… நெஞ்சோடு அவளை நெருங்கச் சாய்த்து, முன்னும் பின்னும் அசைந்தபடியே சிலபல வினாடிகள் இருந்தான்!
அவன் செயல் கொடுத்த இதத்தில், அவள் கண்ணீர் மட்டுப்பட்டது! இமைமூடி அமைதியாக இருந்தவளிடம், “பாரு கீர்த்தி… திலீப் கேட்டத, அவன் பேரன்ட்ஸ் பேசினத யோசிக்காத… யோசிச்சா அழுதுகிட்டேதான் இருப்ப” என்றான்.
“யோசிக்காம எப்படி இருக்கனு தெரியலயே” என்றாலும், சற்றுநேரம் அவன் கையணைப்பில் அரற்றாமல் இருந்தவள்… சட்டென்று, “என்னய பத்தி நான் சொன்னத, ரவி, மதுகிட்டலாம் எதுக்குச் சொன்ன?! அது உன்கிட்ட மட்டுமே ஷேர் பண்ணின ஒன்னு. அத அவங்ககிட்ட சொல்லலாமா?
ரவி எதுக்கு அப்படிக் கேட்கிறான்? எனக்கு ரிலேஷன்ஷிப்க்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கத் தெரியாதுனு சொல்றான், நீ எதும் சொல்ல மாட்டிக்கிற? உனக்கு ஒன்னு தெரியுமா டேவிட், கொஞ்ச நாளைக்கு முன்னாடி அம்மா வீட்லருந்து பேசினாங்க” என்று அதையும் அவனிடம் சொன்னாள்.
கண்ணில் கண்ணீர் தேங்கிட, “இப்படிக் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத, என்னய, அம்மா பத்தி நீங்க என்ன பேசினீங்க” என்று அழுதுவிட்டாள்.
அவளது கண்ணீரை அழுந்த துடைத்து, “என்ன கீர்த்தி நீ… எதுனாலும் பேசு, இப்படி அழாத” என்றான். “இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு” என்றான். “ஏன்… நான் அன்னைக்கு ரவியை எதும் சொல்லலயா” என்று கேட்டதும், “சொன்ன… ஆனா” என்றுவிட்டு, பேசாமல் இருந்து கொண்டாள்.
சற்றுநேரம் பேசாமல் இருந்தவன், அவர்கள் பேசியதை அப்படியே அவளிடம் சொன்னான். “உன் ஃபீலிங்ஸ சொல்லல, உன் பேரன்ட்ஸ் பத்திச் சொன்னேன். இந்த விஷயத்தில, என் ஸ்டன்ட் (Stand) என்னென்னு அவங்களுக்குச் சொல்ல நினைச்சேன்… அன்ட் அஃப்கோர்ஸ் ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்றப்ப, இந்த டாக் இருக்க வேண்டாம்னு நினைச்சேன்.
ஏன்னா என்கிட்ட உன்னய பத்தி சொல்லிட்டு, நீ எப்படி இருந்தனு எனக்குத் தெரியும். அதுமாதிரி டல்லா உன்னய பார்க்க எனக்கு முடியல. அவங்க எதும் கேட்டு… நீ ஹர்ட் ஆகிடக் கூடாதுனு உனக்காக யோசிச்சிப் பண்ணேன், பட் அதனாலே ஹர்ட் ஆவேனு எக்ஸ்பெக்ட் பண்ணல.
உன் அம்மாமேல நீ வச்சிருக்க அஃபக்ஷன் புரியுது கீர்த்தி. அத என்னைக்கும் ஜட்ஜ் பண்ணிக்கிட்டு இருக்க மாட்டேன், அகைன் சொல்றேன் அப்பா பேர் சொல்லாம உன்னய பத்தி சொல்ல எனக்கு ஒரு இஸ்யூவும் இல்ல. பேமிலில டிஃப்ரன்ட் ஒப்பினியன் வரலாம், எதுனாலும் நான் பார்த்துப்பேன்.
இது இப்போ நீ அழுததால எடுத்த டெசிஷன் கிடையாது, நீ உன்னய பத்தி சொன்னப்பவே இப்படித்தான் யோசிச்சேன். இவ்ளோ க்ளியரா இல்லனாலும், நம்ம சண்டை போட்ட அன்னைக்கும் இத நான் சொன்னேன். பட் புரிஞ்சிக்க முடியாத மைன்ட்செட்ல நீ இருந்த.
இப்படிச் சொல்றதால உன்னய மட்டும் ப்ளேம் பண்றதா நினைச்சிக்காத. ரவி அன்னைக்கு அப்படிப் பேசிருக்க வேண்டாம்! அந்த நேரத்தில அத பேசனும்னு அவசியமேயில்ல. பேசினதுக்கு ரவி சாரி கேட்பான், மது கேட்க வச்சிடுவா. பட் அத அக்ஸப்ட் பண்றது… பண்ணாதது, இட்ஸ் யுவர் சாய்ஸ்.
ரவி பேச்சால உனக்கு அவன்மேல் கோபம்னு தெரியுது. அன்ட் யுவர் ஆங்கர் இஸ் ஜஸ்டிபைடு. அதுக்காக அவன் ஃப்ரண்ட்ஷிப் என்னால அவாய்ட் பண்ண முடியாது. பட் ஒன்திங் ஐ அஷ்ஷோர், இனி இப்படி ரவி பேச மாட்டான்” என்று சொன்னபோது, கீர்த்தி டேவிட்டிடமிருந்து விலகப் பார்த்தாள்.
கோபத்தில் இப்படிச் செய்கிறாளென நினைத்தவன், அவளை விலக விடமால் நிறுத்தினான். ரவியின் பேச்சால் வந்த கோபம் இன்னும் அவளுக்கு இருந்தது. ஆனால் அவளது இந்தச் செயல் அதற்காக அல்ல. மீண்டும் அவள் விலகவே எத்தனிக்க, “ஏன் இப்படிப் பண்ற, என்னென்னு சொல்லு…” என்றான்.
மளமளவென கண்ணீர் வடிய, “நீ எனக்காக இவ்ளோ யோசிச்சிருக்க, ஆனா உன்னய புரிஞ்சிக்காம அன்னைக்கு என்னெல்லாம் நான் பேசிட்டேன். அத நினைச்சா ஒரு மாதிரி இருக்குது” என்று விலகப் பார்க்க, “ப்ச் கீர்த்தி” என்று அவளை அவனோடு அழுத்திப் பிடித்துக் கொண்டான்.
பின், “என்ன உனக்காக யோசிச்சிருக்கேன்… மார்னிங் எதயும் யோசிக்காம, பேசினதாலதான் நீ இவ்ளோ அழற கீர்த்தி” என்றான் அவளுக்காக.
வறுத்தம் தோய்ந்து அவன்மீது சாய்ந்து, “திலீப் பண்ணதுல, ரவி பேசினதுல ரொம்பக் கோபம், அத உன்கிட்ட காட்டிட்டேன் டேவிட். உனக்குத் தெரியுமே, ஏமாத்திறனு யாரும் என்னய சொன்னா பிடிக்காதுனு. ரவி அத சொன்னதும், கோபத்த கன்ட்ரோல் பண்ண முடியாம பேசிட்டேன்” என்றாள் அழுதபடியே.
“விடு இத” என்று நெஞ்சில் அழுந்த முகம் சாய்த்து அழுபவளுக்கு ஆறுதலாக தலை கோதியபடியே இருந்தான்.
சட்டென நிமிர்ந்தவள், “ஆனா மெச்சூரிட்டி இல்லனு சொன்னது உன்னதான். போனு சொன்னப்புறமும் போகாம… அன்னைக்கு என்னய புரிஞ்சிக்காம நீ பேசிக்கிட்டே இருந்ததால… அப்படிச் சொன்னேன்” என்றாள்.
“அதெப்படி போ முடியும் சொல்லு”
“ம், போ முடியாது. இப்போ புரியுது, அன்னைக்கு புரியல. உன் அப்பாக்கும் உனக்குமான பான்ட் பத்தி நான் பேசல, அன்னைக்கு அப்படி நீ நினைச்சதும், எனக்கு கோபம். பேசாம நின்னுட்டேன்” என்றவள், “நான் எந்த அர்த்தத்தில சொன்னேன்னு இப்ப புரியுதா டேவிட்… இல்லனா நீ இன்னமும் அப்படித்தான் நினைக்கிறியா” என்றாள் வறண்ட குரலில்.
அவளின் பேச்சைத் தவறாகப் புரிந்துவிட்டோமோ என்ற கேள்வி ஏற்கனேவே வந்திருந்ததால், இல்லையென தலையசைத்தான். கண்களில் கண்ணீர் சூழ யோசித்தாள். தனக்காக சொல்கிறானோ என்று தோன்றவும், “நான் பேசினத அப்படித்தான் புரிஞ்சிக்க முடியுமோ” என்றாள் சந்தேகமாக.
அணைக்கின்ற குரலில், “கீர்த்தி” என்றழைத்து, “அன்னைக்கு அப்படித்தான் அன்டர்ஸ்டான்ட் பண்ணேன், பண்ணிக்க முடிஞ்சது. பட் யோசிக்கிறப்ப அத சரியா புரிஞ்சிக்கலயோனு தோனிச்சு” என்றான்.
அவன் பேச்சைக் கவனிக்காமல் கண்ணீர் சிந்தியபடி அவள் இருக்க… அவள் கன்னங்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தவன், “எனக்கு இப்ப நீ இருந்த சிச்சுவேஷன புரிஞ்சிக்க முடியுது. ஐ ஃபீல் யூ கீர்த்தி, சாரி வேண்டாம், எந்த எக்ஸ்ப்ளனேஷனும் வேண்டாம்… விடு” என்று அவளை அவன்மீது சரித்துக் கொண்டான்.
அவள் விடாமல், நிமிர்ந்து அவன் முகம் பார்த்து, “ரவிக்கும் எனக்கும் இருக்க டேர்ம்ஸ் பத்தி உன்கிட்ட சொல்லிருக்கனும். சந்தோஷத்தில நான் எதையும் யோசிக்கல. அதான் வீடு பார்க்கக்கூட மறந்திருக்கேன்.
எவ்ளோ இர்ரெஸ்பான்ஸிபிளா இருந்திருக்கேன், ச்சே” என்றவள், “ஆனா ரவி விஷயத்த மறைக்கனும்னு நினைக்கல டேவிட். பர்த்டே முடிஞ்சதும் சொல்ல நினைச்சிருந்தேன்” என்று நிறுத்தி, அவன் முகம் பார்த்து, “சொல்லாம இருக்க நினைக்கல…” என்று உடைந்து அழுதபோது இருமல் வந்துவிட்டது.
இருமல் நிற்காமல் தொடரவும் அவளை விலக்கி அமரவைத்து… ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வந்து தர, அதைக் குடித்தவள்… தொண்டையை நீவி விட்டுக் கொண்டேயிருக்க, “என்னாச்சு” என்றான் பதற்றமாக. “வலிக்குது” என்றாள் உள்ளே போன குரலில்.
“இவ்ளோ அழுதா அப்படித்தான் இருக்கும்! போதும், இதயே பேசினா அழறத நிறுத்த மாட்ட, ஜஸ்ட் ட்ராப் இட்” என்றான் குரலில் அழுத்தம் கொடுத்து.
“முடியலயே, ரொம்ப கஷ்டமாருக்கு. எவ்ளோ கஷ்டப்பட்டு சென்டர் இப்படிக் கொண்டு வந்தேன். உனக்குத் தெரியுமே டேவிட், இப்பதான ரெனோவேஷன் பண்ணேன். ஆனா பாரு… ஒரே நைட்ல எல்லாம் போயிடுச்சி.
ஃபோன் இல்ல, கிளைன்ட் கான்டக்ட்ஸ் அதுலதான் இருக்கு, அதுகூட டயரில எழுதிருக்கேன். மேனேஜ் பண்ணிடுவேன். ஆனா என் அம்மா ஃபோட்டோஸ், அவங்க ஞாபகமாக இருந்தது அதுதான். அதும் இப்ப இல்லயே…” என்று அவன் நெஞ்சில் முகத்தை மோதிக்கொண்டு அழுதாள்.
மேலும், “நீயேன் என்னய வேண்டாம்னு சொன்ன, எதுக்கு என்னய விட்டுட்டுப் போன? எப்படி உனக்குப் போக மனசு வந்திச்சி? நான் தேடி வருவேன்னு நீ நினைக்கலயா? இல்ல அப்படி நினைக்க முடியாத அளவுக்கு பேசிட்டேனா??
நான் பேசினதுல ரொம்பக் கோபமா, அதான் விட்டுப் போனியா, கோபம்னா வந்து சண்டை போட்ருக்கலாமே, விட்டு எதுக்குப் போன, இனி என்னைக்கும் இப்படிப் பண்ணாத, என்னால முடியல” என்று கலவையான உணர்வுகளுடன் கண்ணீர் வடித்தாள்.
நடந்தவைகள் எல்லாம் அவளை மிகவும் காயப்படுத்தியிருக்கிறது! அதிலும் இந்தவொரு விடயம்! அதுவும் எதற்கென புரிந்தது அவனுக்கு! அவள்… அவன் அருகாமையை நாடிய கணம், அது கிடைத்திருந்தால்… அவளிடம் இத்தனை பாதிப்பு இருந்திருக்காதோ என்ற கேள்வி எழுந்தது!
‘ஆம்’ என இதயம் பதில் எழுதியது!
அடுத்தநொடி அவளைத் தனியே தவிக்கவிட்டதை நினைத்து மனம் அழுதது. அதற்கடுத்த நொடியே அதைத் தைரியப்படுத்திக் கொண்டான்.
ஆறுதலாக அவள் முதுகில் தடவிக் கொடுத்தபடி, “சென்டர் சரி பண்ணிடுவ, எனக்கு நம்பிக்கை இருக்கு. பட் அதுக்கு முன்னாடி கைய க்யூர் பண்ணனும். மொபைல், ம்ம்… இப்ப எதுவும் யோசிக்க முடியல. என்ன செய்யனு அப்புறம் யோசிக்கலாம், ஓகேவா” என்றான் பொறுமையாக.
அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டு, “நான் பேரீஸ் சொல்லாம போனேன், விட்டுட்டுப் போகல, எப்படி உன்னைய விட்டுப் போவேன்” என்று நெஞ்சோடு அவளை அணைத்து, “சாரி, வேண்டாம்னு சொன்னதுக்கு ரியலி சாரி” என்றான்.
விழுக்கென்று நிமிர்ந்து, “நீ ஏன் சாரி கேட்க, சாரி கேட்காத. நான்தான சாரி கேட்கணும்… நான்தான முதல வேண்டாம்னு சொன்னேன். ஆனா இனிமே அப்படிச் சொல்லவே மாட்டேன்.
கோபம் இருந்தாலும் அப்படிப் பேச மாட்டேன், பேசினாலும் நானே உன்னய தேடி வந்திடுவேன், நீ எங்கயும் போகாம…” என்று பேசும் போதே அழுத்தமாக அவளை முத்தமிட்டு, “இதுக்கப்புறம் உன்னய எப்படித் தனியா விடுவேன், இனி நாம சேர்ந்துதான் இருப்போம்” என்றான்.
வலி நிரம்பிய பார்வையால் அவனைப் பார்த்தவள், அவன் மடியைக் காட்டி, ‘சாய்ந்து கொள்ளவா’ என்றாள் சைகையால்! அவன் ‘ம்ம்’ என்றதும், தலை சாய்த்துக் கொண்டாள்! மனவலிமையைத் தாண்டி மனவலிகள் இருந்ததால், விழியிலிருந்து விழிநீர் விடாமல் இறங்கிக் கொண்டேயிருந்தது அவளுக்கு!!
காயம் ஆற கண்ணீர் சிந்தட்டுமென விட்டுவிட்டான்! வெகுநேரம் ஏங்கி ஏங்கி அழுதாள்! ஆனால் இடைவிடாமல் அவனிடமிருந்து கிடைத்த தலைகோதலில், அது தேம்பலாக குறைந்து!!
கடைசியில் விசும்பல் மட்டும் இருந்தபோது, அவள் ஏதோ யோசிப்பது போல் தெரிய, “என்ன வேணும் கீர்த்தி” என்றான் அவள் விழிநீர் தடங்களை விரலால் வருடித் துடைத்துவிட்டு. அவள் முன்நெற்றி முடிக்கற்றைகளை ஒதுக்கிவிட்டு, குனிந்து முத்தமிட்டான்.
“டேவிட்” என்று அழைத்தவள்… சிறு மௌனத்திற்குப் பின்பு, “நம்ம பேசாம இருக்கிறப்ப என்னய நினைச்சியா, நான் உன்னய நினைச்சி ரொம்ப ஃபீல் பண்ணினேன்” என்று அவள் உழன்றதை உணர்த்தியவள், “உனக்கு?!” என்று அவன் உணர்வுகளை உணர்ந்து கொள்ள கேட்டாள்.
கவனமாக அவளைத் திருப்பி… அவன் முகம் பார்க்க வைத்து, “கீர்த்தி எனக்கு உன்மேல கோபம் இருந்தது… அதுக்காக உன்னய பத்தின தாட்ஸ் இல்லாம இல்ல. ம் யூ நோ, எப்பவுமே கேஃபேலதான் இருந்தேன், அதிகமாக நாம டைம் ஸ்பென்ட் பண்றது அங்கதான… ஸோ!
பேரீஸ் போய் த்ரீ ஃபோர் டேய்ஸ்க்கு அப்புறம் உன்னய பத்தின தாட்ஸ்தான், டு மெனி அன்ஆன்சர்ட் குவஸ்டின்ஸ், ஸோ உடனே உன்னய பார்க்க வெனிஸ் கிளம்பிட்டேன்” என்றான்.
தனக்காக வந்திருக்கிறான்… தன்னைத் தேடி வந்திருக்கிறான் என்பது பெரிய ஆசுவாசத்தை கொடுக்க, “அக்வா ஆல்டானு தெரிஞ்சி நீ வரலயா” என்றாள் களைப்பான குரலில்.
‘இல்லை’ என்று தலையசைத்து, சுருக்கிய அவளது கண்களைச் சுற்றி சுகமாக நீவிட்டபடி, “உன்னய மிஸ் பண்ணேன், ஸோ வந்தேன். பட் சிட்டி கண்டிஷன் பத்தி நியூஸ்ல டீடெயில்ஸ் பார்த்ததும், உனக்கு எதும் ஆயிடுமோனு ரொம்ப பயந்திட்டேன்” என்று கவலையோடு அவளைப் பார்த்தான்.
ஓரிரு நிமிடங்களுக்குப் பின் அவன் பார்வை கனிவாக மாறியது… அதன்பின் காதலாக மாற, கண்ணீரால் நனைந்திருந்த முடிகளை ஒதுக்கிவிட்டு, குனிந்து அவள் முன்னெற்றியில் முத்தமிட்டு, “டோன்ட் க்ரை எனிமோர்” என்று அவன் சொல்லுகையிலே அவள் விழிகள் குளமாயின!
எதுவும் பேசாமல் மிருதுவாக அவள் கண்ணோரங்களைத் துடைத்து மட்டும் விட்டான். ஏனைய விடயங்களால் அவள் விழிகளில் வலி நிரம்பியிருந்தாலும், அவர்களுக்குள் நடந்தவைகளைப் பேசிப் புரிந்ததால் வந்த நிம்மதி அவளது விழியோரம் இருப்பதை அவன் விரல் உணர்ந்தது.
ஒற்றை விரல் உணர்ந்ததை உயிரின் ஒவ்வொரு அணுவும் உணர்ந்து நிம்மதி அடைந்தபோது, வாகாக இருக்கும்படி கையை வைத்தவள், முகத்தை அழுந்த அவன் மடியில் சாய்த்துக் கொண்டாள். அவளுக்கு ஏதுவாக தன்னைச் சரி செய்தவன், “பெயின் இருக்கா” என்றான் அவள் கையைப் பார்த்து.
அந்தப் பரிவில்… இன்னும் அவன் மடியில் அழுந்த சரிந்து, “ம்ம்” என்றாள்.
“கிளினிக் அப்பாயின்மென்ட் கேட்டிருக்கேன். பட் பெயின் டாலரேட் பண்ண முடியலனா சொல்லு, எமெர்ஜென்சினு டைரைக்ட்டா போயிடலாம்” என்றான் கரிசனமாக.
அந்தக் கரிசனத்தில்… விழுந்த சிறு விரிசல் மறைய, “ம்ம்” என்றாள்.
அழுது சிவந்திருந்த அவள் விழிகளை நீவிட்டபடி, “சிட்டி நார்மல் ஆகட்டும், நீ ஆசைப்பட்ட மாதிரி நிறைய கிஃப்ட்ஸ் வாங்கலாம்” என்று சொன்னதற்கு, அவள் ஒன்றும் சொல்லவில்லை.
ஆனால், “பசிக்குது” என்றாள் சோர்வாக. “அப்பவே சொன்னேல, இரு ஃபுட் எடுத்திட்டு வரேன்” என்று அவளை விலக்கி எழுந்ததும்… காஃபி கோப்பையை அவள் எடுக்க, “கொடு, ஹீட் பண்ணிக் கொண்டு வர்றேன்” என்று விரைவாக சென்று உணவை எடுத்து வந்தான்.
உணவை அவனே கொடுக்க, ஓய்ந்து சுவரில் சாய்ந்தபடி வாங்கினாள். அவள் மெலிந்தது போல் தெரிய, “இத்தன நாள் சரியா சாப்பிடலயா” என்றான். “நீ இங்க இல்லைனதும், நிஜமாவே என்னய வேண்டாம்னு நினைக்கிறியோனு ரொம்ப பயந்திட்டேன். அதுக்கப்புறம் சாப்பிட முடியல” என்றாள்.
அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவளை மெதுவாக அவனருகே வரவைத்து, லேசாக நெற்றி முத்தம் வைத்து, அவன் நெஞ்சின் மேல் சாய்த்துக் கொண்டு, சாப்பாடு கொடுத்து முடித்து, பின் காஃபி கொடுத்தான். அவள் குடித்ததும், வீங்கியிருந்த கையில் வலிநிவாரணியை ‘ஸ்ப்ரே’ செய்துவிட்டான்.
அழுததில்… அசதியில் அவளுக்குத் தூக்கம் சொக்கியது. அவன், “போ, ரெஸ்ட் எடு” என்றதும், எழுந்து மெத்தையில் படுத்து, “நீயும் சாப்பிடு” என்றாள்.
“ம்ம்” என்று உண்டு முடித்தான். பகல்வெளிச்சம் வராமல் திரைச்சீலைகளை இழுத்துவிட்டு வந்து, அவளருகில் படுத்துக் கொண்டான். காயம் பொருட்டு கவனமாக அவளை அவன் பக்கம் திருப்பியதும், அவனை நெருங்கிப் படுத்து, அவன் நெஞ்சில் முகம் வைத்து, இமைகள் மூடினாள்.
கனிவாக அவளைத் தட்டிக் கொடுத்தபடியே இருந்தான். இத்தனை நாட்கள் தலைசாய்க்க தோளில்லாமல், மனம் தளர இடம் இல்லாமல் இருந்தவளுக்கு, அது அத்தனை இதத்தைத் தர, சட்டென உறங்கிவிட்டாள்! அவனுக்கும் அதீத உடல், மனசோர்வு… அதனால் சற்றுநேரத்தில் அவனும் உறங்கிவிட்டான்!
சில வினாடிகளுக்குப் பின்… அமைதி, அழகியல் நிறைந்த அந்த அறையில், வெண் திரைகளைத் தாண்டி வரும் பகல் ஒளியில், விசாலமான மெத்தையின் ஒரு விளிம்பில் அருகருகே அவர்கள் அயர்ந்து துயில்வதைப் பார்த்து… சிறு பிரிவில் சிக்கித் தவித்திருந்த இருவர் இதயமும் சீராக துடிக்கத் துவங்கியது!!