Kathambari Novels
அத்தியாயம் – 25
இத்தனை நாள் பழக்கத்தில் இப்படியொரு தொனியில் கீர்த்தியிடம் டேவிட் பேசியதில்லை. உள்ளுக்குள் பதைபதைப்பு வர, ‘என்ன பேசச் சொல்கிறான்?’ என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பேசும் தொனி சிறிதும் மாறாமல் டேவிட், “பெஸ்ட் ஃப்ரன்ட் இன் தே வேல்ட்னு சொல்வியே… அதான இது?!” என்று திலீப்பைக் காட்டிக் கேட்டான்
அந்தக் கேள்வியில் தன்னை, தன் செயலை மிகவும் கீழாக… மோசமாக திலீப் உணர்ந்தான். கீர்த்தி பேசாமல் இருந்தாள். “சொல்லு அதான இது?!” என்று மீண்டும் டேவிட் கேட்டான். திலீப் ஏதோ பேச வந்ததற்கு, “சொன்னேன்ல… நீ பேசாதனு” என்று அவனை அடக்கிவிட்டான் டேவிட்.
திலீப் அப்படியே அமைதியாகிவிட்டான்!
அவ்வளவு நேரம் ஒன்றும் பேசாமல் நின்ற கீர்த்தி, “இப்போ என்னய என்ன சொல்ல சொல்ற?!” என்று டேவிட்டிடம் கேட்டாள்.
அவளைக் கோபமாக பார்த்தபடி… அவன் பேசாமல் இருக்க, “எஸ்!! அவன் என் பெஸ்ட் ஃப்ரண்ட்தான்… உன் கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சா?” என்றாள்.
“நீ அப்படி நினைக்கிற… பட் ஹீ…” என்று டேவிட் ஆரம்பிக்க, “என்ன கேட்க வர்றேன்னு புரியுது. அதுபத்தி இனிமே யாரும் எதும் கேட்க வேண்டாம், பேச வேண்டாம்” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.
“அதெப்படி பேசாம இருக்க முடியும்? இதுமாதிரி சிச்சுவேஷன்ல உன்னய நான் நிறுத்தினா நீ பேசாம போவியா?”
பதில் சொல்லாமல் ஒருநொடி அமைதியாக அவனைப் பார்த்து நின்றாள். பின், “என்ன டேவிட் பிரச்சனை உனக்கு… என்ன பிரச்சனை? இப்ப நீ என்னய டவுட் பண்றியா… சொல்லு டவுட் பண்றியா” என்று கத்தினாள்.
டேவிட்டும் கோபத்துடன், “டோன்ட் இன்டர்பெர்ட் மை வேர்ட்ஸ் நெகட்டிவ்லி, என்ன குவெஸ்டினு இத போய் கேட்க” என்றுவிட்டு, “பட் ஒன்திங்… உனக்கு ஒருத்தர் பேசறத எப்படி மாத்தணும்னு நல்லா தெரியுது” என்றான்
“புரியல… ஏன் இப்படிச் சொல்ற?” என்று அவள் கேட்க, “எங்க ஸ்டார்ட் பண்ண பேச்ச எங்க கொண்டு வந்திருக்க பாரு… எல்லாம் ஏன்… இதோ நிக்கிறானே இவனை சேஃப் பண்ணத்தான?” என்று திலீப்பைக் காட்டினான்.
“ஓ… உன் ஃப்ரெண்ட் என்னய ஏமாத்திறானு சொல்றான், நீ அவனைக் கேள்வி கேட்காம என்னய கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கிற… இது எதுக்கு? இவனைக் காப்பாத்ததான?” என்று ரவியைக் கைகாட்டினாள்.
“நீ பார்த்தேல… பேசாதனு அவன வார்ன் பண்ணத. வேற என்ன பண்ணனும்னு நினைக்கிற?” என்று பட்டென்று கேட்க, “என்ன பண்ணனு சொல்லவா, இந்த மாதிரி ஒரு டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்ப அவாய்ட் பண்ணிடு! அதான் உனக்கு நல்லது ” என்று அடுத்த நொடியே பதில் தந்தாள்.
அதற்கடுத்த நொடி டேவிட், “எது டாக்சிக்… நீ ஃப்ரண்டுனு சொல்ற, அவன் ப்ரோபெளஸ் பண்ணிட்டு நிக்கிறான்… எது டாக்சிக் ரிலேஷன்ஷிப்? இவனை நீ அவாய்ட் பண்ணு! அதான் உனக்கு நல்லதுனு நான் சொல்லவா” என்றான்.
அவள்… ரவி, திலீப்பை ஒப்பீடு செய்துவிட்டு, “சொல்லனும்னா சொல்லிக்கோ, ஆனா என்னால முடியாது” என்றாள்.
அதே ஒப்பிடு அவனும் செய்து, “அப்படித்தான் எனக்கும்” என்றான்.
“நல்லா யோசிச்சிப் பாரு, இவ்ளோ நாள் நாம பேசியிருக்கோமே எப்பவாது இப்படியொரு பேச்சு வந்திருக்கா… இல்லயே டேவிட்! இவன் வந்தப்புறம்தான் இதுமாதிரி…” என்று ரவியைக் கோபமாக பார்த்தாள்.
“நீயும் யோசிச்சிப் பாரு… இதுக்கு முன்ன இப்படி நாம பேசிருக்கோமானு?! ஈவினிங் கூட நல்லாதான பேசினோம். இப்ப பேசறோம்னா என்ன காரணம், எல்லாம் இவன் பண்ணதாலதான்” என்று திலீப்பைக் கோபமாக பார்த்தான்.
“சரி அப்படியே இருக்கட்டும்” என்றவள்… அப்போதிருந்து, ‘தன் குடும்பம் பற்றி என்ன பேசியிருப்பார்கள்?’ என்று மனதில் ஓடிய கேள்வியால், “இப்போ இதுக்குப் பதில் சொல்லு… என்னய பத்தி உன்கிட்ட சொன்னதை, இவன்கிட்ட போய் எதுக்கு டிஸ்கஸ் பண்ணின?” என்றாள்.
“வேர்ட்ஸ் கரெக்டா யூஸ் பண்ணு. என்னய ரொம்ப கோபப் படுத்தற. டிஸ்கஸ் ஒன்னும் பண்ணலை. சொன்னேன்… நத்திங் மோர்”
“அதான் ஏன்?”
“நாம மீட் பண்றப்போ பேரன்ட்ஸ் பத்தி கேட்பாங்க… என்கிட்ட சொல்றதுக்கு உனக்கு ஈஸியா இருந்திருக்கும். மத்தவங்க கேட்கிறப்போ அதே ஈஸிநெஸ் வராதுல. நீ அன்கம்ஃபர்டபிளா, இன்கன்வினியன்ட்டா பீல் பண்ண கூடாதுனு நினைச்சிதான் சொன்னேன்”
“நீயா நினைச்சிக்கிட்டா நான் என்ன பண்ண முடியும்” என்று வார்த்தைகள் விழுந்த விதத்தில்… அவளுக்காக அவன் செய்த ஒரு விடயத்தை அலட்சியப் படுத்துவது போல் அவள் குரல் ஓங்கி ஒலித்தது.
அதில் அவன் பேச்சற்று நின்றான்!
கீர்த்தி, “என் அம்மா லவ் மேரேஜ் பண்ணிகிட்டாங்க. அவங்க லவ் பண்ணவன் அவங்களை ஏமாத்திட்டுப் போயிட்டான். இத சொல்றதுக்கு எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றாள் தெளிவாக.
அதுவரை டேவிட் சொன்னதால் பேசாமல் நின்ற ரவி, “பிரச்சனை இல்லனா உன் அப்பா பேர் சொல்ல வேண்டியதுதான” என்றுவிட… டேவிட், “ரவி!! எந்த நேரத்தில என்னடா பேசற? இத இப்போ ஏன் பேசனும்? நேத்தே பேசியாச்சுல, அப்புறமும் ஏன்” என்றான் மிகுந்திருந்த எரிச்சலுடன்.
“இல்ல… வீட்ல” என்று ரவி ஆரம்பிக்க, “நான்தான் மேனேஜ் பண்ணிப்பேன்னு சொல்லிட்டேனே. விடு” என்றுவிட்டு, ‘இதைக் கீர்த்தி எப்படி எடுத்துப்பாளோ’ என்ற சிறு மனப் பதற்றத்துடன் டேவிட் அவளைப் பார்த்தான்.
இறுக்கமாக அவள் முகம் மாறிப்போயிருக்க, “நத்திங் மோர்னு சொன்ன, டிஸ்கஸன் நடக்கலனு சொன்ன… அப்போ இது என்ன?” என்றாள்.
ரவி பேசியது இந்த நேரத்தில் தேவையில்லாதது என்று டேவிட்டிற்குத் தோன்றியது. என்ன சொல்லி கீர்த்தியைச் சமாதானம் செய்ய என்று தெரியாமல் நின்றான்.
டேவிட் ஒன்றும் சொல்லாமல் இருக்கவும், “சரி அத விடு! என்ன வீட்ல… என்ன மேனேஜ் பண்ணனும்” என்றாள். அப்போதும் அவன் பேசாமல் இருக்க, “பதில் சொல்லு டேவிட்” என்றாள்.
“ஸீ கீர்த்தி… இங்க, இந்தியாலனு எனக்கு நிறைய ரிலேட்டிவ்ஸ், பெரிய பேமிலி. உன் பேரன்ட்ஸ் பத்தி சொன்னா ஒவ்வொருத்தருக்கும் டிஃபரன்ட் ஒப்பீனியன் இருக்கும். அத நான் மேனேஜ் பண்ணிப்பேன்னு சொன்னேன், அவ்வளவுதான்” என்றான் பொறுமையாக.
ரவி கேட்டதின் கோபத்திலே இருந்தவள், “இதுக்கு அர்த்தம் என்ன… உனக்கு ஒரு ஃப்ரீவிலேஜ் இருக்கு. அதுமாதிரி எந்த ஃப்ரீவிலேஜும் எனக்கு இல்லனு சொல்ற… ரைட்?” என்றாள்.
அவள் திரித்துப் பொருள் கொண்ட விதத்தில், ‘என்ன இவள்?’ என்ற எரிச்சல் உண்டானது. அவள் பேச்சில்… அதை அவள் பேசிய விதத்தில், “இல்ல… பட் உனக்கு அந்த காம்ப்ளெக்ஸ் இருக்குது போல” என்றான்.
உடனே திலீப், “லவ் பண்றனு சொல்ற ஆனா அவளைப் புரிஞ்சிக்காம பேசற! கீர்த்தி ஒன்னும் அப்படிக் கிடையாது” என்றவன்… கீர்த்தியிடம், “இப்போ பேச வேண்டாமே, வீட்டுக்குப் போ. எதுனாலும் நாளைக்குப் பேசிக்கோ” என்று மெல்ல சொல்லிப் பார்த்தான்.
‘எதற்கு இவன் இடையில் வந்து பேசுகிறான்’ என்று எக்கச்சக்க எரிச்சலுடன் டேவிட்டிற்கு வந்திருக்க, “அவ என்ன செய்யணும்னு நீ எதுக்கு சொல்லற, ஏன் அவளுக்குத் தெரியாதா” என்றான்.
அதற்கு கீர்த்தி, “நான் என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்… யாரும் சொல்ல தேவையில்ல. இத முடிச்சிட்டு நானே போயிடுவேன்” என்றிருந்தாள்.
அடுத்தநொடி டேவிட், “என்ன மீனிங்ல இப்படிப் பேசற கீர்த்தி?!” என்றான் புருவங்கள் சுருங்க.
எங்கோ பார்த்து, “இதுதான் நான்னு சொல்றதுக்கு எனக்கு எந்தக் கஷ்டமும் இல்ல. உனக்குத்தான் என்னய பத்தி… என் பேக்ரவுண்ட் பத்தி சொல்றதுக்கு, இன்கன்வேனியன்ட்டா இருக்கும் போல” என்றாள். உடனே, “அப்படித்தான் இருக்கும்… நீங்க பேசறதுலருந்தே தெரியுதே” என்றும் சொன்னாள்.
அவ்வளவு தெளிவாக சொன்ன பிறகும், அவள் பேசியதில் டேவிட்டின் கோபம் கூட, “முடிச்சிக்கலாம்னு எத சொன்னனு சொல்லு” என்றான்.
“எனக்காக நீ எதும் மேனேஜ் பண்ண வேண்டாம் டேவிட்” என்றாள்.
“க்ளியரா சொல்லு கீர்த்தி, எத முடிச்சிக்கலாம்னு சொன்ன” என்றான் மீண்டும்.
“க்ளியராதான… சொல்றேன்! இந்த ரிலேஷன்ஷிப்ப கன்டினியூ பண்ண எனக்கு விருப்பம் இல்ல. இங்கயே… இந்த இடத்திலயே எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்” என்றாள்.
“தப்பான டெசிஷன் கீர்த்தி…. இப்படியொரு டெசிஷன இந்த சிச்சுவேஷன்ல எடுக்கணுமா”
“முடிவெடுக்க தெரியாம நான் இருந்ததில்ல. இது சரியான முடிவுதான். அன்ட் இதான் என் முடிவும்! எனக்கு இந்த ரிலேஷன்ஷிப் வேண்டாம். நீ வேண்டாம்”
“வேண்டாமா… இவ்வளவு ஈஸியா ஒரு ரிலேஷன்ஷிப்ப தூக்கிப் போடுவியா நீ” என்றான் டேவிட்.
உடனே ரவி, “ரிலேஷன்ஷிப்க்கு இம்பார்டன்ஸ் கொடுத்திருந்தா, அவ அம்மா சைடு ரிலேட்டிவ்ஸ் கூட பேசிருப்பாளே! பேசமாதான இருக்கிறா! அதுலயே தெரியல?!” என்றதும், “அவங்க பேசறப்ப, நீயேன் பேசற?! பேசாம இரு” என்று திலீப் எச்சரிக்க, “அத நீ சொல்லாத!” என்றான் ரவி.
அவர்கள் பேச்சைக் கவனிக்கும் நிலையில் டேவிட் இல்லை. ஒருமுறை கண் மூடித் திறந்தான். எரிச்சல், கோபம்… என்று மற்ற எல்லாவற்றையும் தள்ளி வைத்தான். பின் சமாதான குரலில் கீர்த்தியிடம், “நீ வா… வீட்டுக்குப் போய் நம்ம பேசலாம்” என்றான்.
ரவி பேசியதைக் கேட்டிருந்தவள், “ஸோ ரிலேட்டிவ்ஸ் பத்தியும் டிஸ்கஷன் போயிருக்கு… இன்னும் என்னெல்லாமோ! இது எனக்குத் தேவையா? போதும், என்னய ஜட்ஜ் பண்ற மாதிரி பேச்செல்லாம் வேண்டாம். பெரிய பேமிலினு வேற சொல்ற, இன்னும் எத்தனை பேர் இப்படி பேசுவாங்களோ” என்றாள்.
“யாரும் எதும் பேசமாட்டாங்க கீர்த்தி” என்றவன்… இன்னுமே சாந்தமாகிப் போன குரலில், “உனக்கென்ன… நான் சொன்னதுல கோபம். அதான இப்படிப் பேசற, ஓகே, நான் சாரி கேட்டுக்கிறேன். இப்ப வா போகலாம்” என்று அவள் கைப்பிடித்து அழைத்தான்.
சட்டென அவன் கையைத் தட்டி, “சொன்னது புரியலயா உனக்கு, நான்தான் தெளிவா வேண்டாம்னு சொல்லிட்டேன்ல, அப்புறமும் எதுக்காக பேசிக்கிட்டு நிக்கிற… பேசாம போ டேவிட்” என்றாள்.
“சாரி கேட்டப்புறமும் இப்படிப் பேசினா எப்படி… கஷ்டம் கீர்த்தி” என்று அவளை நோக்கி வந்தான்.
பின்னே தள்ளிச் சென்றவள், “கஷ்டம் உனக்குத்தான், எனக்கில்ல. என்னால தனியா இருக்க முடியும். நான் யாரையும் டிபன்ட் பண்ணி இருந்ததில்ல. நான் யாரோடையும் எமோஷனல் அட்டாச்டும் கிடையாது” என்றாள்.
என்னமோ அவள் பேச்சு அவனது பலவீனத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவது போலிருக்க… தள்ளி வைத்திருந்த கோபமும் எரிச்சலும் வந்துவிட, “அப்ப அன்னைக்கு நீ என்னோட எமோஷனல் அட்டாச்டுனு சொன்னது என்ன கீர்த்தி” என்று கேட்டான்.
அதற்குப் பதில் சொல்லாமல், “ஒரு ரிலேஷன்ஷிப் சரி வராதுனு தெரிஞ்சா, மூவ் ஆன் பண்ணிட்டு போய்க்கிட்டே இருக்கனும்” என்றாள்.
“இத என்கிட்ட சொல்லாத… அவன்கிட்ட சொல்லு, கரெக்டா இருக்கும்” என்று திலீப்பைக் காட்டினான் டேவிட்.
“உன்கிட்ட சொல்றதும் கரெக்ட்தான்” என்றாள்.
“இன்னைக்கு ரொம்ப இம்மெச்சூரா பிஹேவ் பண்ற”
“மெச்சூரிட்டி பத்திலாம் நீ பேசாத” என்று கீர்த்தி சொல்ல, அதன்பின் அங்கே பெரிய அமைதி நிலவியது.
டேவிட் எதுவும் பேசாமல் கீர்த்தி பேசியதை யோசித்து இருந்தான். அவள் முகமொழியைப் பார்த்தபடிதான் நின்றான். சிலநொடிகளுக்குப் பின், “நீ பேசினதுக்கு என்ன அர்த்தம்…” என்று கண்கள் சுருக்கி கேட்டான்.
எதையும் விளக்கும் மனநிலையில் இல்லாததால் கீர்த்தி அமைதியாக நின்றாள்!
ஒரு நெடுமூச்சு எடுத்தவன், “இப்போ நீ பேசினது, அப்பாக்கு எனக்கும் இருந்த பான்ட்(bond), அப்பா மேல எனக்கிருந்த அட்டாச்மென்ட்… இதனால அப்பா இல்லனதும் நான் சஃபர் ஆனது, அழுதது பத்திதான? அததான மெச்சூரிட்டி இல்லைனு சொல்ற?” என்று கேட்டான்.
அதே அமைதியுடனே நின்றாள்!
“ஸோ அதான்” என்றவன், “இத சொல்லிக் காட்டுவனு எக்ஸ்பெக்ட் பண்ணல, நீ இப்படிலாம் பேசுவனும் எக்ஸ்பெக்ட் பண்ணல” என்றான்.
கீர்த்தியின் அமைதி நீளத்தான் செய்தது!
“என் அப்பாக்கும் எனக்கும் இருந்த பாண்ட் பத்திலாம் கமென்ட் பண்ண, யாருக்குமே ரைட்ஸ் இல்ல. அண்ட்… அப்படி கமென்ட் பண்றவங்க கூடலாம் என்னால லைஃப் லாங் டிராவல் பண்ண முடியாது… டிராவல் பண்ணனும்னு அவசியமும் கிடையாது” என்றான்.
அதற்கும் அமைதியாக இருந்தாள்!
“கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீ சொன்னதுதான்! நானும் இப்ப சொல்றேன்! இந்த ரிலேஷன்ஷிப்ப கன்டினியூ பண்ண எனக்கும் விருப்பமில்ல. அன்ட் இதனால எனக்கு எந்தக் கஷ்டமும் இருக்கப் போறதில்ல” என்றான்.
அப்போதும் அமைதிதான் கீர்த்தியிடம்!
கடைசியாக, “என்னய வேண்டாம்னு சொன்னேல, எனக்கும் நீ வேண்டாம்” என்று சொல்லி, போய்விட்டான்.
அதன்பின்னும் கீர்த்தி அமைதியாகவே இருந்தாள்!!