Kathambari Novels
அத்தியாயம் – 22
ரவி பேசுவது போல் தெரியவில்லை என்றதும்… மது “கன்கிராட்ஸ், அம் ஸோ ஹேப்பி ஃபார் யூ” என்றாள். டேவிட் சிறுபுன்னகை செய்ய, “கீர்த்திகிட்டவாது நல்லா பேசுவியா, இல்ல இப்படித்தானா” என்றாள் கிண்டலாக.
“ம்ம் கீர்த்தி நிறைய பேசுவா, என்னால மேட்ச் பண்ண முடியாது. சம்டைம்ஸ் ஃபாஸ்ட்டா பேசுவா, ஃபாலோவ் பண்றதே கஷ்டமா இருக்கும். பட் மது… ஐ வொன்டர் அவகிட்ட பேசிக்கிட்டே இருக்கனும்னு தோனும்” என்று ஆசையான குரலில் சொன்னான்
“அதான் லவ்” என்று சிரித்து, “யாரு முதல லவ் சொன்னா” என்றாள்.
“நான் இன்டைரைக்டா சொன்னேன்… கீர்த்தி டைரைக்ட்டா சொன்னா, அன்ட் தென் நானும் சொன்னேன்” என்று அவளுக்குப் பதில் சொன்னாலும் டேவிட் பார்வை ரவி மீதே இருந்தது.
“எங்க வச்சி லவ் சொல்லிக்கிட்டிங்க” என்று ஆர்வமாக கேட்டாள்.
“கஃபே ஒர்க் ஏரியால, அங்கதான் மீட் பண்ணுவோம்”
“என்ன கிஃப்ட் எக்ஸ்சேஞ் பண்ணிக்கிட்டிங்க”
“அதலாம் இல்ல மது”
“அவங்க…” என்று ஆரம்பிக்க, ‘கொஞ்சம் பொறு’ என்பது போல் காட்டியவன், அமைதியாக இருந்த ரவியைப் பார்த்தான். மதுவும் குனிந்திருந்த ரவியைப் பார்த்தாள். டேவிட், “ரவி” என்று அழைக்கவும்… ரவி நிமிர்ந்து அமர்ந்தான்.
“என்ன யோசிக்கிறடா” என்று டேவிட் கேட்க, “இல்ல எப்பருந்து…” என்று ரவி ஆரம்பிக்கையிலே மது முகம் போனதைப் பார்த்து அவன் அமைதியாகிவிட, டேவிட், “எக்ஸாக்டா சொல்ல முடியல, கீர்த்தி கேஃபே வர ஆரம்பிச்சப்புறம், வி கெட் குளோஸர்” என்றான்… ரவி கேட்க வந்த கேள்வி புரிந்து.
மது, “என்ன கேள்வி இது” என்று முகம் சுருக்க, “அவனுக்கு கேட்க தோனுது, கேட்கிறான். விடு” என்று டேவிட் ஆதரவாக வர… மது, “எனக்கு ஷாக்காவும் இருக்கு, ஷாக் இல்லாத மாதிரியும் இருக்கு” என்று அகம் மகிழ்ந்து, “கீர்த்திய பார்க்கனும். எப்ப மீட் பண்ணலாம்” என்று கேட்டாள்.
“ம், அவகிட்ட சொல்றேன்” என்றவன், “பிஃபோர் தேட் உங்ககிட்ட சில விஷயம் பேசனும்” என்று ஆழ்ந்த குரலில் சொன்னதும், ‘என்ன சொல்லனும்’ என்பது போல் இருவரும் அவன் முகம் பார்த்தனர்.
“இது கீர்த்தி பேமிலி பத்தி” என்று அவள் பகிர்ந்த உணர்வுகளை விட்டுவிட்டு, உண்மைகளை மட்டும் சொன்னான். இருவரும்… டேவிட் பேசத் தொடங்கும் போது எப்படிப் பார்த்திருந்தனரோ அப்படியே இப்போதும் பார்த்தனர்.
“அவகிட்ட பேமிலி பத்தி கேட்க வேண்டாம்… அதுபத்தி பேச வேண்டாம்னு நினைச்சிதான் உங்ககிட்ட சொன்னேன்”
“இத சொல்றப்ப ஃபீல் பண்ணாங்களா, அதான் இப்படிச் சொல்றியா” – மது.
சற்று யோசித்து, “பேமிலி பத்தி கேட்டு, அவ அன்கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ண கூடாதுனு தோனுது. அவ கொஞ்சம் ஃபீல் பண்ணாலும், ஐ கெனாட் ப்பேர் [bear] இட்” என்றதும், “அவ்ளோ லவ்வா டேவிட்” என்று மது சிரிக்க, டேவிட்டும் சிரித்துக் கொண்டான்.
“தனியா எப்படி மேனேஜ் பண்றாங்க” – மது.
“சப்போர்ட் பண்ண ஃப்ரண்ட் இருக்கிறதா சொன்னா” என்றதும், அதுவரை ஒன்றும் பேசாமல் இருந்த ரவி, “அவங்க அம்மாகூட பிறந்தவங்க இருக்கிறதா சொன்னேலடா” என்று கேட்டான்.
“ம்ம்… பட் அவங்ககூட அவளுக்கு எந்த கான்டேக்ட்டும் இல்ல. அவங்க யாரும் கீர்த்தி அம்மாகூட பேசல. ஸோ அப்படியே இவளும் இருந்திட்டா”
“ரிலேட்டிவ்ஸ் இருக்கிறப்ப ஏன் தனியா இருக்கனும். அவங்க அம்மா செஞ்சது பிடிக்காம, பேமிலில பேசாம இருந்திருப்பாங்க, கீர்த்திகிட்டயும் அப்படியே நடந்துப்பாங்கனு சொல்ல முடியாதே. கீர்த்தி பேசிப் பார்த்து, அவங்களோட கான்டேக்ட்ல இருந்திருக்கலாமே” – ரவி.
சிலவினாடிகள் பேசாமல் இருந்த டேவிட், “அவ பேசினதுலருந்து சொல்றேன், ஷி லைக்ஸ் ஹெர் மாம் வெரி மச். அப்படி இருக்கிறப்ப, அவங்கள அவாய்ட் பண்ணவங்ககூட ரிலேஷன்ஷிப் மெயின்டெய்ன் பண்றது அவளுக்கு கஷ்டம் இல்லயா… எப்படிப் பேசுவா” என்றான்.
“அப்போ அவங்க அம்மா வீட்ல அப்படி ரியாக்ட் பண்ணிருக்கலாம், இப்போ மாறியிருக்கலாம் இல்லயா, அதான் கேட்டேன். அதோட உங்க வீட்ல, எங்க வீட்ல… உன் மேரேஜ் பத்தி எக்ஸ்பெக்ட்டேஷன் உண்டு. அவங்ககிட்ட கீர்த்தி பேரன்ட்ஸ் பத்தி…” என்று பாதியிலே நிறுத்தினான்.
“சொன்னா… எல்லாருக்கும் இல்லனாலும், சிலருக்கு டிஃபரன்ட் ஒப்பீனியன் இருக்கும். பட் மேனேஜ் பண்ணிடுவேன்”
சிறு யோசனைக்குப் பின் ரவி, “இதுக்குப் பேசாம அவங்க அப்பா பேர் மட்டும் சொல்லிட்டா, பேரன்ட்ஸ் இல்லனு முடிச்சிடலாம். மேனேஜ் பண்ற தேவையும் இருக்காது” என்றான்.
மது, “கீர்த்திகிட்ட நீ இத கேட்டியா?” என்றாள் டேவிட்டிடம்.
“அப்படி ஒருத்தனை அப்பாவா அக்ஸப்ட் பண்ணிக்க கீர்த்திக்கு முடியல மது. பிடிக்காது, பேர் சொல்ல மாட்டேன்னு சொன்னா”
“அக்சப்ட் பண்ண வேண்டாம், அது ஓகே. ஆனா பேர் சொன்னாதான, நீ வீட்ல சொல்ல, அவங்க அம்மாக்கு, கீர்த்திக்கு மரியாதையா இருக்கும். அம்மாவ கீர்த்திக்குப் பிடிக்கும்னு வேற சொல்ற… அப்ப சொல்லலாமே” – ரவி.
“பட் பேர் மட்டும் சொல்லுனு கேட்கிறதே, அப்பானு அவனை அக்சப்ட் பண்ண ஃபோர்ஸ் பண்ற மாதிரிதான. அன்ட் கஷ்டப்பட்டு ஸ்ட்ரகிள் பண்ணி… படிச்சி சைக்காலஜிஸ்ட், ரீசோல் தெரபி சென்டர்னு ஒரு ரெஸ்பெக்ட, ஒரு ப்ராண்ட் கிரீயேட் பண்ணிருக்கா.
இப்ப போய் விட்டுட்டுப் போனவன் பேர் சொன்னாதான், உனக்கு மரியாதை இருக்கும்னு சொல்றது, ஐ திங் அன்ஃபேர்னு தோனுது, ஸோ கீர்த்தி சொல்றது சரினு நினைக்கிறேன்” என்றான் டேவிட்.
மது, “நான் இப்படி யோசிக்கல, உங்க மாமா வீட்ல, ரவி வீட்ல… இத சொன்னா புரிஞ்சிப்பாங்களானும் எனக்குத் தெரியல. ஆனா எனக்கு கீர்த்திய பிடிக்கும், நீ லவ் பண்ணதால இல்ல, முன்னமே. இப்ப இன்னமும் பிடிக்குது” என்றாள்.
டேவிட் ரவியைப் பார்க்க, “யாரும் புரிஞ்சிக்கலைனாலும்… உனக்குச் சரினா, எனக்கும் சரிதான்” என்று சொல்ல… மது, “பார்த்துக்கலாம், அவங்ககிட்ட எப்ப மீட் பண்ணலாம்னு கேளு டேவிட்” என்றாள்.
டேவிட், “ம், கேட்கிறேன் மது. இன்னைக்கு ஃபேக்ட்ரி போறியா ரவி” என்று கேட்டபடி அலைபேசியை எடுத்துக்கொண்டு எழுந்தான்.
“இல்லடா… நாளைக்குத்தான்”
“ம், பை. கஃபே கிளம்பறேன்” என்று விடைபெற, “அம்மா ஸ்னாக்ஸ் கொடுத்து விட்ருக்காங்க, டேஸ்ட் பண்ணிப் பார்க்கிறியா” என்று மது கேட்க, “அப்புறமா மது” என்க, “கீர்த்திக்கு?” என்று கேட்க, “மீட் பண்றப்ப கொடுக்கலாம்” என்று சொல்லிவிட்டு, டேவிட் அங்கிருந்து கிளம்பினான்.
அவன் போனபின் யோசனை முகமாக இருந்த ரவியிடம், “என்ன… ஏன் இப்படி இருக்க?” என்று கேட்டு மது அவனருகில் வந்தமர்ந்தாள்.
“கீர்த்தி எதையும் டேவிட்கிட்ட சொல்லல. சொல்லிருந்தா, நிச்சயம் அதுபத்தி கேட்டிருப்பான். அவ ஏன் சொல்லாம இருக்கிறானு தெரியல. ஆனா என்னால அவன்கிட்ட மறைக்க முடியாது. அப்படி நாங்க இருந்ததே கிடையாது”
“மறைக்க வேண்டாம்… டேவிட்கிட்ட நாம சொல்லலாம். ஆனா கீர்த்தியை மீட் பண்ணப்புறம்… பொறுமையா சொல்லிக்கலாம்”
அவன் பேசாமல் இருக்க, “ரவி” என்று மது அழுத்தி அழைக்க, “சரி” என்றான். ஆனாலும் யோசனையாகவே இருந்தான். “என்ன ரவி?” என்றாள்.
“அவ லாஸ்ட்டா ஒன்னு சொன்னா… மண்டைக்குள்ள அது ஓடிட்டே இருக்கு”
“என்ன சொன்னாங்க”
“எனக்கும் டேவிட்க்கும் இடையில நீ வராதனு சொன்னா” என்று இறுக்கமான குரலில் சொல்லவும், “இது எப்போ ரவி” என்றாள் மெல்லிய குரலில்.
“இந்தியா போறதுக்கு முன்னாடி”
“ஏன் அப்படிச் சொல்லனும்… நீ என்ன சொன்ன”
“நான் ஒன்னும் சொல்லல, டேவிட் தெரபிக்கு பீஸ் கொடுத்தேன்”
சிறு யோசனையுடன் இருந்தாள். பின், “ஒருவேளை அப்பவே அவங்களுக்கு டேவிட்ட பிடிச்சிருக்கலாம். இல்லனா, இவ்ளோ நம்மள பேசினவன்கிட்டருந்து பணம் வாங்க வேண்டாம்னு நினைச்சிருக்கலாம். இத போட்டுக் குழப்பிக்காத நீ. அதோட இதலாம் டேவிட்கிட்ட சொல்லாத” என்றாள்.
“ம்ம்…. இத விடு! அவன் தெரபி என்னாச்சு, அத பாதியிலயே விட்டாச்சா”
“நான் இத யோசிக்கல பாரு… டேவிட் நல்லா கேஷுவலா பேசினானா, இத அப்படியே மறந்துட்டேன். அவன் வந்ததும் கேட்கலாம்” என்று எழுந்தாள். ரவி முகம் அதன்பின்னும் யோசனையாக இருக்க, “இன்னும் என்ன” என்றாள்.
“அவ்வளவு சீக்கிரமா யார்கிட்டயும் பேசவே மாட்டான், லவ் எப்படினு”
“அதான் லவ்!” என்றாள் சிரித்த முகமாக.
“சும்மா இதயே சொல்லாத” என்றான் சிறு எரிச்சலுடன்.
“நீங்க எத்தனை நாள்ல லவ் சொன்னீங்க… உனக்கு ஒரு நியாயம் அவனுக்கு ஒரு நியாயமா” என்று சிறு கோபத்துடன் பேசியவள், “நாம லவ் பண்றதை முதல டேவிட்கிட்டதான சொன்ன!?” என்றாள்.
“இப்ப எதுக்கு இந்தக் கேள்வி”
“பதில் சொல்லு”
“ஆமா”
“அப்போ அவன் என்ன சொன்னான்?!”
“நம்ம ரெண்டு பேரையும் சேர்ந்து பார்க்கணும்னு சொன்னான்”
“பார்த்ததும்…”
“நமக்காக கிஃப்ட் கொடுத்தான்”
“அதுக்கப்புறம் என்ன கேட்டான்?”
“உடனே மேரேஜ் பண்ணிக்க போறீங்களானு கேட்டான்”
“ஆனா நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கனு பாரு”
படாரென எழுந்து, “என்ன நான் பண்ணிட்டேன்… நீ வேணா பாரு, அத்தனை பேரும் ஆச்சரியப்படுற மாதிரி டேவிட் மேரேஜ நடத்தறேன்” என்றான்.
“ஒன்னு அந்த எஸ்ட்ரீம், இல்லனா இந்த எக்ஸ்ட்ரீம்…” என்று முணுமுணுத்து பயணச் சாமான்கள் பக்கம் சென்று… அம்மா வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருட்களை எடுத்து வைக்க போனாள்.
“ஒரே எக்ஸ்ட்ரீம்தான்… டேவிட்க்காக பண்ணுவேன். கீர்த்திகாக இல்ல”
“இப்படிப் பேசாத ரவி! இனி அவங்ககிட்ட பேசறப்ப பார்த்துப் பேசனும். எதும் பேசி அவங்களை ஹர்ட் பண்ணக் கூடாது. எனக்காக… ஏன்னா எனக்கும் அவங்கள ரொம்ப பிடிச்சிருக்கு”
“நான் பேசி அவள ஹர்ட் பண்ணா… அவ அதுக்குமேல பேசி என்னய ஹர்ட் பண்ணுவா” என்றவன், “ஆனா மது… உனக்கு என்னய தவிர எல்லாரையும் பிடிக்குதுல” என்று வாகாக சோஃபாவில் படுத்துக் கொண்டு, “ஏன் இப்பவே அன்பேக் பண்ற, ரெஸ்ட் எடுக்கலாம்ல” என்றான்.
“எல்லாம் எடுத்து வச்சிட்டு வெளிய போனும்… ஹெல்ப் பண்ணேன்”
படுத்தவன்… அவளுக்கு உதவிட எழுந்தபடி, “எங்க போனும்” என்றான்.
“கீர்த்திக்கு கிஃப்ட் வாங்கணும்” என்றதும், மீண்டும் சோஃபாவில் படுத்து, “ப்ச் உனக்கு ஹெல்ப்லாம் இல்ல, நீயே பண்ணிக்கோ” என்று அலட்சிய சலிப்புடன் அவன் கூற, “ஒழுங்கா ஹெல்ப் பண்ணு” என்று அவள் அவனை நோக்கி வர, “முடியாது போ” என்று அவன் கண்கள் மூடிக் கொள்ள… உடனே அவள் ஏதோ பேச, அப்படியே அவர்கள் பேச்சு தொடர்ந்தது!
*********************
எஸ்பிரெசோ கேஃபே, சான் போலோ!
நேரம் இரவு ஒன்பது மணி! காஃபி கோப்பைகள், வடிகட்டி எல்லாம் எடுத்து டிஷ் வாஷரில் போட்டுவிட்டு, நாற்காலிகளை ஒழுங்குபடுத்தி முடித்த டேவிட் வெளியே வந்து நின்றான். மிதமான மழை பெய்தது.
அதனால் வெளிப்புறமாகக் கதவைத் தாழிட்டு அதன் மேல் சாய்ந்து நின்று, அலைபேசியில் இதமான செல்லோ இசையைத் தவழவிட்டு, செவிப்பேசியை மாட்டிக் கொண்டு, இமைகளை மூடி அதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் குடையைப் பிடித்தபடி வந்து நின்ற கீர்த்தி, “டேவிட்” என்று சொல்வதும் அவன் கண் திறப்பதும் ஒரே நேரத்தில் நடந்தது. அவன் அவளை மென்சிரிப்புடன் பார்க்கவும், ‘இயர்ஃபோன் எடுத்திடவா’ என்று சைகையால் கேட்க, அவன் எடுக்கப் போக, ‘நான்… நான்’ என்று அவள் எடுத்துவிட்டாள்.
அவன் கையில் குடையைக் கொடுத்து, அவன் மீது சாய்ந்து, இரு கைகளால் இறுக அணைத்துக் கொண்டாள். ஒரு நொடி அப்படியே இருந்தவள், நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவள் நெற்றியில் முத்தமிட்டான். அதன் பின்னும் அவள் அவன் முகமே பார்க்க, சிறு புன்னகையுடன் மீண்டும் முத்தமிட்டான்.
சிறு மழை, குறு வெயில் தரும் இதம் அவளுக்கு… அந்த இதத்தில் திரும்பவும் அவன்மீது சுகமாக சாய்ந்து கொண்டாள்!
மீண்டும் அவன் சாய்ந்து நிற்கப் போக, மழைக் காற்றில் அவள் நடுங்க, “இட் இஸ் கோல்டு அவுட்சைட்” என்று குடையை மடக்கி வெளியே வைத்துவிட்டு உள்ளே அழைத்துப் போனான். கஃபே ஒர்க் ஏரியா சென்றதும், முடிக்கற்றை மீதிருந்த மழைத்துளிகளை, அவனுடன் பேசியபடி தட்டிவிட்டுக் கொண்டாள். அவன் காஃபி தயாரித்து கொடுக்க, வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்.
அவளருகே வந்து நின்றவன், “தென் கீர்த்தி, ரவி மது வந்திட்டாங்க” என்றான்.
அக்கணத்தில்… அந்த நொடியில்தான் டேவிட் ரவியின் நண்பனும் கூட என்ற ஒன்று ஞாபகத்தில் வந்தது. காஃபி குடிப்பதை ஒரு நிமிடம் நிறுத்தினாள். பின் ஒரு மிடறு வைத்து, “ம்ம்” என்றாள்.
“அன்ட் நம்மளைப் பத்தி சொல்லிட்டேன்”
உடனே, ‘ரவி ஏதும் சொல்லவில்லையா?’ என்றுதான் தோன்றியது. ஏன் அவன் சொல்லவில்லை? நடந்ததைப் பெரிதாக கருதவில்லையா?! அப்படியானால் நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்… என்ற குழப்பத்தோடே, “என்ன சொன்னாங்க அவங்க” என்றாள்.
“உன்னை மீட் பண்ணனும்னு சொல்றாங்க” என்றவன், “யூ நோ ஒன்திங்… ரவி மதுவும் லவ் மேரேஜ்தான்” என்று சொல்லிவிட்டு, “எப்போ மீட் பண்ணலாம்னு நீ சொல்லு?” என்றான்.
எதையும் ரவி சொன்னாலும், சொல்லாவிடிலும்… டேவிட்டிடம் நான் சொல்ல வேண்டும்! எப்போது சொல்ல என்று யோசித்தபடியே, “நாளைக்கு ஈவினிங்” என்று பதில் சொன்னாள்.
“ம்ம்”
இரண்டு நாள்கள் கழித்துச் சொல்லலாமென முடிவெடுத்து, “எங்க” என்றாள்.
“எனி eatery, டைனி மீல் மாதிரி பிளான் பண்ணலாம்”
“ம்” என்றவள்… காஃபி குடித்து முடிக்கவும், “வீட்டுக்குப் போலாமா” என்றான். ‘ம்கூம்’ என்று மறுத்து தலையசைத்து, “இப்பதான வந்தேன்” என்றாள். “இட்’ஸ் ரெய்னிங், அதான் சொல்றேன்” என்றான். “நான் பேசனுமே” என்றாள். “நானும் உன்கூட வீட்டுக்கு வர்றேன் கீர்த்தி” என்றான்.
“நாற்பது நிமிசத்தில வீட்டுக்குப் போயிடலாம் டேவிட், எனக்கு நிறைய நேரம் உன்கூட ஸ்பென்ட் பண்ணனும்” என்று சிறு அடம் போல சொல்ல, “நான் வீட்ல கொஞ்ச நேரம் இருக்கிறேன். வா கிளம்பலாம்” என்று அவன் சொன்னபின், சரியென்று கிளம்பினாள்.
அவள் வெளியே போய் நிற்க, டேவிட் கஃபே விளக்குகளை அணைத்துவிட்டு, கதவைத் தாழிட்டவன், அவள் கொண்டு வந்த குடையை எடுத்து விரிக்கவும், அவளும் அதனடியில், அவனருகில் வர… இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
அவள் அமைதியாக வர, “பேசணும்னு சொன்ன” என்று அவன் கேட்க, “நீயே பேசு” என்றதும், “ஏன் என்னய டீஸ் பண்ணவா” என்று கேட்டவன், “இன்னும் நீ நான் ஃபோரிங் பெர்…” என்று தொடங்க, அவன் பக்கத்தில் நடந்து வந்தவள் வேகமாக அவன் முன் வந்து… உள்ளங்கையால் அவன் வாயை மூடி, “இப்போ இல்ல, இன்னொரு நாள்” என்றாள்.
‘உன் இஷ்டம்’ என்பது போல் புன்னகை செய்து, “யூ வில் கெட் வெட்” என்று அவளை அவன் பக்கத்தில் நிறுத்தவும், அவன் கைகோர்த்துக் கொண்டாள். அவளுடைய விருப்பப்படி அவன் பேசிக் கொண்டே நடக்க… அவன் தகவலாக பேசினாலும் அதை முறுவலுடன் கேட்டபடி அவனுடன் நடந்தாள்.
சில இடங்களில் இருட்டு, சில இடங்களில் மஞ்சள் விளக்கொளி வெளிச்சம்! ஈரமான தெருக்களில் கலைநயத்துடன் கட்டப்பட்ட கட்டிடங்கள், கடைகளின் பிம்பங்கள்… சடசடவென்று பொழியும் மழை, குடையுடன் நடக்கும் மக்கள், வீசுகின்ற குளிர்காற்று… என்றிருந்தது வெனிஸில் அன்றைய இரவு!
இப்படி இருந்த சூழலில், மக்களோடு மக்களாக, அடர்சிவப்பு நிற குடைக்குள், டேவிட்டும், கீர்த்தியும் நடந்து சென்றார்கள்.
**********************
அடுத்தநாள் மாலைநேரம்!
ஃபிளோரியான் கஃபே, சான் மார்கோ!!
சான் மார்கோ சதுக்கத்தில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப் பழமையான கஃபே! இதன் கட்டமைப்பு பதினெட்டாம் நூற்றாண்டில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தரும். கலையம்சங்கள் செறிந்த கண்ணாடிகள், விளக்குகள், மர வேலைப்பாடுகள் கொண்டதாக உட்புறத்தில் இருக்கைகள் இருக்கும்!
காற்றோட்டம் நிறைந்த வெளிப்புறத்திலும் இருக்கைகள் உண்டு!!
சரம் சரமாக விளக்குகள் தொங்கும் வெளிப்புற நடைகூடத்தின் பக்கமிருந்த இருக்கைகளில் ரவி, மது, டேவிட் அமர்ந்திருந்தனர். நேரம் ஏழு. கீர்த்திக்காக மூவரும் காத்திருக்கின்றனர். மேசையில் இருந்த பூங்கொத்து, பரிசை பார்த்த டேவிட், “என்ன கிஃப்ட்” என்றான் மதுவிடம்.
“கீர்த்திக்காக”
“எஸ், ஐ ஆப்சலூட்லி நோ(know), பட் என்ன கிஃப்ட்”
“சொல்ல மாட்டேனே, சர்ப்ரைஸ்” என்று மது புன்னகையுடன் மறுக்க, “நான் சொல்றேன்டா, அது வாட்ச்” என்று ரவி முந்திக்கொண்டு வந்து சொன்னான்.
“ஏன் சொன்ன ரவி… நான் சர்ப்ரைஸ் பண்ண நினைச்சேன்” என்று மது முகம் சுருக்கிட, “கீர்த்தியதான… இவன்கிட்ட சொல்றதுக்கு என்ன” என்ற ரவி, “ஆமா அதென்ன ஒருத்தருக்கு மட்டும் கிஃப்ட்… டேவிட்க்கு?” என்றான்.
மது, “நான் கீர்த்திக்கு வாங்கிருக்கேன்… நீ டேவிட்க்கு வாங்கிக் கொடு. நல்லா இருக்கும்ல” என்று கேட்க, “உனக்கென்னடா வேணும்” என்று டேவிட்டை ரவி பார்க்க, அதுவரை எப்படி அவர்கள் பேசியதைப் புன்னகையோடு டேவிட் பார்த்திருந்தானோ… அப்படியே இப்போதும் இருந்தான்.
அவன் இயல்பு அதுதான் என்பதால், மது விட்டுவிட்டாள். அதன்பின் ரவி, மது இந்தியா சென்று வந்தது பற்றிப் பேசினார்கள். அமைதியாக டேவிட் கேட்டுக் கொண்டிருந்தான். தற்செயலாக பெல் டவர் பக்கமாகப் பார்த்த மது, “கீர்த்தி வந்தாச்சு” என்றாள்.
உடனே டேவிட்டும் அந்தத் திசை பார்த்தான். சற்றுதூரத்தில் வரும் கீர்த்தியும் அவனைப் பார்த்தாள். இருவரின் இதயம் சந்தோசம் கொள்வதை இதழ்கள் புன்னகைத்து தெரியப்படுத்தின!
அவள் அருகில் வந்ததும்… மது எழுந்து, “ஹே… கீர்த்தி கன்கிராட்ஸ்” என்று பூங்கொத்து மற்றும் பரிசை கொடுத்தாள்.
இதை எதிர்பார்க்கவில்லை கீர்த்தி! ஒரு நொடி உறைந்து நின்றாள். பின்னர் அவைகளை வாங்கிக்கொண்டு, “தேங்க்ஸ் மது” என்று அவளைத் தோளோடு தோளாக அணைத்துச் சொன்னாள்.
மது, “உட்காரு” என்றாள். பின், “சாரி உட்காருங்க” என்று மாற்றினாள். “சாரி எதுக்கு, முதல சொன்னது ஓகேதான்” என்று கீர்த்தி சொல்லவும், “ஆனா அது கேஸூவலா வர கொஞ்ச நாளாகும்” என்று சிரித்தபடி மது அமர்ந்தாள்.
கீர்த்தி டேவிட்டைப் பார்த்து, “ஒரு செஷன் ப்ரீபோன்ட் பண்ண வேண்டியதா இருந்தது. அதான் லேட்டாயிடுச்சி” என்று படபடவென சொல்ல, “மெசேஜ் பண்ணிருந்தயே” என்றான் மெதுவாக. “அப்போவே வந்திட்டிங்களா” என்று இவள் கேட்க, “ம், பட் ஓகே… உட்காரு” என்றதும், அமர்ந்தாள்.
அதன்பின்தான் எதிரிலிருந்த ரவியைப் பார்த்தாள். அடுத்தநொடியே அவன் பேசிய பேச்சுகள் அனைத்தும் கண்முன்னே வந்து நின்றது! ரவி… அவள் வந்த நொடியிலிருந்து அவள் பேசினதையே யோசித்திருந்தான்!
அதிலும், ‘எனக்கு டேவிட்டுக்கும் நடுவில நீ வந்திடாத’ என்று அவள் பேசியது திரும்பத் திரும்ப அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது!!